ராஜபாளையம், மார்ச் 4: உடல்நலக்குறைவால் உயிரிழந்த போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு டிஎஸ்பி தலைமையில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ராஜபாளையத்தில் உடல் நலக்குறைவு காரணமாக போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுரேஷ் உயிரிழந்தார். அவரது உடலுக்கு டிஎஸ்பி பசிணா பீவி தலைமையில் ராஜபாளையம் உட்கோட்ட காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
