மதுரை, மார்ச் 4: மதுரை. தல்லாகுளம் அருகே ஆத்திக்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சூரியகுமார் மனைவி புவனேஸ்வரி (26). ஒரு மகள் உள்ள நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது புவனேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகலறிந்த தல்லாகுளம் போலீசார், உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
