வேதாரண்யம், மார்ச் 4: நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழிகாட்டுதலின்படி பேரூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன் வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஸ்டாலின் மகளிர் படை வீடு வீடாக பரப்புரை நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புவனேஸ்வரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், பேரூர் துணைச் செயலாளர் அன்பு,
சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு ராமகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி ரமேஷ், மகளிர் அணி துணை அமைப்பாளர் இளமதி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கயல்விழி, பேரூர் நெசவாளர் அணி அமைப்பாளர் சசிபிரியா , வார்டு உறுப்பினர் ராமலிங்கம், ஸ்டாலின் மகளிர் படை மகளிர்கள் ரம்யா, ஜில்தாராணி, ரஞ்சனா, இலக்கியா, சுதா, பாத்திமா பீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
