நாகர்கோவில், மார்ச் 4: நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, திக மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நல்லபெருமாள் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் வரவேற்றார். விசிக மாவட்ட செயலாளர் சவுத்திரி. இந்திய கம்யூனிஸ்ட் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
