சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் www.tnscw.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார் மேலாண்மை அமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதில் பெறப்படும் புகார் மனுக்கள் அனைத்தும் இணையதளம் வழியாகவே தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்படும். கள அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்ட பின், அதன் விவரத்தையும் இந்த இணையதளம் வழியாகவே சமர்ப்பிக்க ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் இணையதளத்தில் புகார் அளிக்க புதிய வசதி
- பெண்கள் ஆணையம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை
- முதல் அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
- சென்னை செயலகம்
