கடத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி

கடத்தூர், பிப்.5: கடத்தூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், துப்புரவு காவலர்கள், அலுவக பணியாளர் ஆகியோருக்கு நேற்று கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி 2ம் கட்டமாக நேற்று போடப்பட்டது. தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் மேற்பார்வையில் நடந்தது. பின்னர் பேரூராட்சி பணியாளருக்கு, பாதுகாப்பாக பணி செய்தல், நோயில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த முக கவசம் அணிதல் உள்ளிட்ட அறிவுரை பணியாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் பார்திபன், செந்தில், மாதன், இளநிலை உதவியாளர் பத்மாவதி, விஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: