தர்மபுரி, பிப்.5: தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் 2வது முறையாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 3ஆண்டுகள் ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரத்தினகுமார், கடந்த வாரம் 30ம் தேதி இடமாற்றம் செய்து, அவருக்கு பதிலாக தர்மபுரி நகர இன்ஸ்பெக்டராக, சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பணியாற்றும் பாஸ்கரபாபு நியமிக்கப்பட்டுள்ளார், என சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்தார்.