அரூர், பிப்.3: அரூர் கீரைப்பட்டி ஊராட்சிக்குட்ட வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த அணையின் உபரி நீரை பயன்படுத்தி எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, முத்தானூர், மாவேரிப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் நிரப்பட்டுள்ளன. இந்நிலையில், வள்ளிமதுரை வரட்டாறு அணையின், வலதுபுற கால்வாய் கடந்த 4 வருடங்களாக தூய்மை செய்யப்படவிலை. இதனால், வலதுபுற கால்வாய் மூலம் பயன்பெறும் மொள்ளன் ஏரி, அல்லிக்குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் புகார் கூறினர். போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுற கால்வாய் பகுதியிலுள்ள முள்புதர்களால் சேதமடைந்து இருந்தது.