டி20 உலக கோப்பை கிரிக்கெட்: கத்துக்குட்டி நெதர்லாந்துடன் பாகிஸ்தான் போராடி வெற்றி

கொழும்பு: உலக கோப்பை டி20 கிரிக்கெட்டில் நேற்று பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி பெற்றன. இந்தியா, இலங்கை இணைந்து 10வது ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றன. இந்த தொடரில் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. லீக் போட்டிகள் நேற்று துவங்கின.

கொழும்புவில் காலையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்ய விளையாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. நெதர்லாந்து தரப்பில் கேப்டன் எட்வர்ட்ஸ் 37 ரன், லீடு 30 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக மிர்சா 3 விக்கெட், நவாஷ், அப்ரார், சயிம் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து இறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் 16.1 ஓவரில் 114 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்ததால் ஒருகட்டத்தில் தோல்வியடையும் நிலையில் இருந்தது. இறுதியில் ஆல்ரவுண்டர் அஷ்ரப் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 29 ரன்களை எடுத்து பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து காப்பாற்றினார். ஆட்டநாயகன் விருது அஷ்ரப்பிற்கு வழங்கப்பட்டது.

Related Stories: