தர்மபுரி வழியாக சேலம்-பெங்களூர் பயணிகள் ரயிலை இயக்க கோரிக்கை

தர்மபுரி, பிப்.2: தர்மபுரி வழியாக செல்லும் சேலம்-பெங்களூர் பயணிகள் ரயிலை இயக்க பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து, தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு தினந்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் கடந்த 9 மாதமாக இந்த ரயில் இதுவரை இயக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சேலம்-பெங்களூரு பயணிகள் ரயிலை இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரி, சேலம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: