பழநி, பிப். 4: பழநி அருகேயுள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45). பழநி அடிவாரத்தில் உள்ள பேன்சி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பழநி-பாலசமுத்திரம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
