காங்கயம், பிப்.4: அண்ணா நினைவு நாளையொட்டி, காங்கயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், காங்கயம் நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன், காங்கயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், காங்கயம் நகர மன்ற தலைவர் சூரிய பிரகாஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
