மதுரை, செல்லூர் பாக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(47). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஜன.28ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்தவர் படியிலிருந்து தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தோர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் மாரியப்பன் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
