பரமத்திவேலூர், ஜன.28: பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் சோழசிராமணி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 779 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.61.90-க்கும், குறைந்த பட்சமாக ரூ.31.39-க்கும், சராசரியாக ரூ.57.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2.69 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 940 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சம் ரூ.74.78-க்கும், குறைந்த பட்சம் ரூ.37.59க்கும், சராசரியாக ரூ.55.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5.80 லட்சத்திற்கு ஏலம் போனது.
ரூ.5.80 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
- பரமதேவேலூர்
- தேசிய விவசாய
- சந்தை
- Pothanur
- சோழசிராமணி
- ஜேதார்பாளையம்
- Kapilarmalai
- பிலிக்கல்பாளயம்
- அண்ணாநகர்
- பாண்டமங்கலம்
