பாலக்கோடு, ஜன. 29: மாரண்ட அள்ளி அருகே, பன்னிஅள்ளி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்ட விழா நடந்தது.
மாரண்டஅள்ளி அருகே பன்னிஅள்ளி கிராமத்தில், சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு எருதாட்ட விழா நடக்கவில்லை. இந்நிலையில், நடப்பாண்டு நேற்று எருதாட்ட விழா நடந்தது. முன்னதாக ஊர் சார்பில் பூஜை செய்து, காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சாமனூர், பஞ்சப்பள்ளி, எம். செட்டிஅள்ளி, அத்துமூட்லு, மாரண்டஅள்ளி, மல்லாபுரம் ராயக்கோட்டை, வெள்ளிச்சந்தை ஆகிய ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டன.