தர்மபுரி, ஜன.29: தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத்தையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்மபுரி குமாரசாமி பேட்டையில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 24ம் தேதி கொடியேற்றமும், தினமும் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. நேற்று எஸ்வி ரோடு விநாயகர் கோயிலில் இருந்து, ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பால்குடம், பூ காவடிகள் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.