பாஜக உட்கட்சி மோதலால் மாவட்ட தலைவர் கார் கண்ணாடி உடைப்பு

திருக்கோவிலூர், ஜன. 24: திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் தர்மராஜ்(42). இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜ தலைவராக உள்ளார். இவருக்கும் திருக்கோவிலூர் அடுத்த முகையூரைச் சேர்ந்த பாஜ மாநிலத் துணைத் தலைவர் ஏஜிசம்பத்துக்கும் கடந்த சில மாதங்களாக உள்கட்சி மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பிரதமர் மோடி சென்னை அடுத்த மதுராந்தகத்தில் பொதுக் கூட்டத்திற்கு வருவதற்காக வாகன செலவிற்காக 3 லட்சம் ரூபாயை கட்சி தலைமை மாவட்ட தலைவர் தர்மராஜிடம் கொடுத்ததாக தெரிகிறது. இதில் பங்கு பிரிப்பதில் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சம்பத் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு வீரபாண்டி கிராமத்தில் உள்ள பாஜ மாவட்ட தலைவர் தர்மராஜ் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களை உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் அரகண்ட நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கார் கண்ணாடி உடைத்தது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் கோரியிருந்தார். அதன்பேரில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏஜி சம்பத், மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு, தொகுதி இணை அமைப்பாளர் லோகநாதன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் பாஜக உடள்கட்சி பூசலால் மாவட்ட தலைவர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுசம்பந்தமாக விழுப்புரம் பொறுப்பு டிஎஸ்பி மனோகரனும் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். றித்த அசோகன், ராஜேஷ், மனோஜ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: