தர்மபுரி, ஜன.28: தர்மபுரி -சேலம் மெயின்ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து அரசு கலைக்கல்லூரி பஸ் ஸ்டாப் வரை, சுமார் அரை கி.மீ., தொலைவிற்கு சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தொழிலாளர்கள் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரிவாக்க பணியின்போது, சேலம் மெயின்ரோட்டில் இருந்து ஏமகுட்டியூர் பிரிவு சாலை வளைவில், மழைநீர் செல்வதற்கு தரைபாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் அமைப்பதற்கான பணிகள் நேற்று துவங்கியது. இந்த சாலை விரிவாக்க பணியால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.