தர்மபுரி, ஜன.28: தர்மபுரி அருகே ஊர் மக்களே ஒன்றிணைந்து மயான பாதையை சீரமைத்தனர். தர்மபுரி அருகே பாகல்அள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மயானத்திற்கு செல்லும் பாதையானது பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம இளைஞர்களே ஒன்று சேர்ந்து மயான பாதையை சீரமைக்க முடிவு செய்தனர்.