அரூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

அரூர்,ஜன.28: வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொறுப்பாளர்கள் விசி சட்டமன்ற தொகுதி செயலாளர் சாக்கன் சர்மா, ராமச்சந்திரன், ரகுநாத், கேசவன், தீத்து, திமுக சண்முகம், முகமது அலி, வெங்கடேன், ஜார்ஜ், சிபிஐ குமார், தமிழ்குமரன், சிசுபாலன், வேடியப்பன், அல்லிமுத்து, விஸ்வநாதன், கோவிந்தன், மல்லிகா, கமலா மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: