அரூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

அரூர், ஜன.28: திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொது கூட்டம், அரூர் மேல்பாட்சாப்பேட்டையில் நடந்தது. நகர பொறுப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய பெறுப்பாளர் சௌந்தரராசு வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் பெருநற்கிள்ளி, மாநில தீர்மானக் குழு உறுப்பினர் கீரை விசுவநாதன், மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் ராசேந்திரன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் வேடம்மாள், சந்திரமோகன், செங்கண்ணன், கிருஷ்ணகுமார், குபேந்திரன், சேகர், ஓவியர் குப்பன், ரவி, சென்னகிருஷ்ணன், திருவேங்கடம், சின்னசாமி, டாக்டர் சுரேஷ்குமார், மலர்மன்னன், காதர்பாஷா, பாண்டியன், பேட்டை சேகர், பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழழகன் நன்றி கூறினார்.

Related Stories: