தீபம் தொண்டு நிறுவனம் சார்பில் இயந்திரம் மூலம் ஊதுபத்தி தயாரிக்கும் பணி துவக்கம்

அரூர், ஜன.24: தீபம் தொண்டு நிறுவனம் மற்றும் நபார்டு  வங்கி சார்பில், இட்சப்பட்டியில், இயந்திரம் மூலம் ஊதுபத்தி தயாரிக்கும் பணி துவங்கியது. நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன இயக்குநர் கற்பகவள்ளி தலைமை வகித்தார். நபார்டு வங்கியின் மண்டல மேலாளர் பிரவின்பாபு குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்தார். இந்தியன் வங்கி கிளை மேலாளர் தென்னரசு, வங்கிப் பணிகள் குறித்து விளக்கினார். பயிற்றுநர்கள் மூர்த்தி, குணவதி, உமா மகேஸ்வரி, சரவணன், அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வெற்றிவேல் நன்றி கூறினார்.  ...

Related Stories: