கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத, படித்த இளைஞர்களுக்கு தமிழக அரசால் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ₹200, மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் ₹600, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹300, மாற்றுத்திறனாளிகளுக்கு ₹600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ₹400, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹750, பட்டதாரிகளுக்கு ₹600, மாற்றுத்திறனாளிகளுக்கு ₹1000 வழங்கப்படுகிறது.