கலெக்டர் அலுவலகத்தில் கலைநிகழ்ச்சி

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கிராமிய இசை, பாடல், நடனம் நடந்தது. தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் சாமி வேடங்கள் அணிந்து நடித்து காண்பித்தனர். அரசு பணியாளர்கள், அதிகாரிகள் வேட்டி அணிந்து வந்திருந்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கார்த்திகா, சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்(பொ) தணிகாசலம், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் ஹேமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: