மழை குறைந்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

 

குன்றத்தூர்,டிச.1: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. டிட்வா புயல் காரணமாக நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்து, கடல்போல் ரம்யமாக காட்சியளித்து வருகிறது. இதனால், தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை ஏரியில் இருந்து 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அதுவே இரவில் 3000 கன அடியாக உயர்த்தப்பட்டு, உபரிநீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்தநிலையில், டிட்வா புயல் காரணமாக நேற்று சென்னை புறநகர் பகுதிகளில்க னமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நேற்று காலை 6 மணி வரை ஏரியில் இருந்து 2,250 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு கூடுதலாக மழை பொழியாமல் குறைந்த அளவு மட்டுமே மழை பெய்ததால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.20 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 2908 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 1,250 கன அடியாகவும் உள்ளது.

இதனால் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. சென்னை மக்களின் கோடை கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையில் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக நேற்று மாலை 4 மணிக்கு ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை முற்றிலுமாக அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், ஏரிக்கு வரும் நீரின் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

Related Stories: