தர்மபுரி, ஜன.7: தர்மபுரி மாவட்டத்தில் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கும் வகையில், கிராமங்களுக்கு காவல் அலுவலராக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்பி தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில், காவல்துறை சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில், கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எஸ்பி பிரவேஷ்குமார் பேசியதாவது:மாவட்டம் முழுவதும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் கிராமத்திற்கு சென்று குற்றம் மற்றும் அனைத்து வித தகவல்களையும் சேகரித்து, அதனை எஸ்பிக்கு நேரடியாக தெரிவித்து குற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.