பாலக்கோட்டில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

பாலக்கோடு, டிச. 31: பாலக்கோடு வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கணபதி ஊராட்சி பெல்ரம்பட்டி கிராமத்தில், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முருகன் பேசினார். கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவை நிராகரிப்போம் என கையெழுத்திட்டனர். இதில் செந்தில்குமார், மகேஷ், சக்திவேல், நடராஜ், மணிகண்டன், செல்வம், மணி, சோமு, ராஜகோபால், முருகேசன், கணேசன், தேவேந்திரன், செழியன், மணிவண்ணன், குமார், வழக்கறிஞர் மணிவண்ணன், குமரன், சேட்டு, கார்த்திகேயன் உபட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: