தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

தர்மபுரி, டிச.27: தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், கோட்டை உருதுப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி,  நகர செயலாளர் கூடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதை போல், அதற்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: