பென்னாகரம், டிச.21: பென்னாகரம் அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பென்னாகரம் அருகே மேற்கு கள்ளிபுரம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 35 ஆண்டுக்கு முன்பு ₹5.60 லட்சம் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.