தர்மபுரி டிச.21: தர்மபுரி மாவட்டத்தில் 2116 வீடுகள் கொண்ட 4 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணியை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார். தர்மபுரி மாவட்டத்தில் ரூ.172.94 கோடி மதிப்பீட்டில் கொண்டகரஅள்ளி திட்டப்பகுதியில் 280 அடுக்குமாடி குடியிருப்புகள், அரூர் பேரூராட்சியில் அம்பேத்கர் நகர் மற்றும் பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதியில் 1416 அடுக்குமாடி குடியிருப்புகள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் நம்பிப்பட்டி திட்டப்பகுதியில் 420 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 2116 வீடுகளை கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார்.