கிருஷ்ணகிரி, மார்ச் 19: ஓசூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கேசவன். இவரது மகன் அருள்ராஜ்(25). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதே போல், கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்ள அந்த சிறுமி வற்புறுத்தியபோது அதற்கு அருள்ராஜ் மறுத்துள்ளார்.