கோவை, அக். 16: தமிழக விவசாய சங்கத்தினர் மாநில செயலாளர் வேலுநாயக்கர் தலைமையில் மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் அளித்த அம்மனுவில் கூறியிருப்பதாவது : தற்போது தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மழை பெய்து வருவதால் காற்றில் இருக்கும் மாசின் அளவு குறைவாக இருக்கும். தற்போது செங்கல் சூளைகள் இயக்காமல் இருப்பதாலும், லாரிகளை இயக்காமல் இருப்பதாலும் நிச்சயம் மாசின் அளவுகளை முழுமையாக அளவிட முடியாது. எனவே, தற்போது எடுக்கப்படும் மாசு அளவுகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை, எனவே காற்று மாசை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை 6 மாதங்கள் வரை நீட்டிக்கும் பட்சத்தில், மீண்டும் சூளைகள் இயக்கப்பட்டு, லாரிகளின் இயக்கமும் அதிகரிக்கும்போது உண்மையான அளவுகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.