கல்லூரி மாணவி தற்கொலை

தர்மபுரி, ஆக.22: இண்டூர் அருகே செக்காரப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் ரம்யா(19). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரம்யா, அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த 14ம் தேதி விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்ட குடும்பத்தினர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ரம்யா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: