அரூரில் கொ.ம.தே.க ஆலோசனை கூட்டம்

அரூர், ஜூலை 24: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், ஊராட்சி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அரூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட விவசாய அணி இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் சிவன், பழனிசாமி, வேடியப்பன், செந்தில், கவியரசு, தவமணி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து கிளைகளிலும் பெயர்பலகை, கொடிகம்பம் அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, கிளை பொறுப்பாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: