அமைச்சர் மாவட்டத்தில் மண்ணை கவ்விய பாமக

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகனின் சொந்த மாவட்டம் என்பதால், பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக, தொகுதி முழுவதும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மேலும், பாமகவுக்கு சாதகமான தொகுதி என கண்டறியப்பட்ட தர்மபுரியில், அன்புமணி சுலபமாக வெற்றி பெறுவார் என்றே அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், திமுக வேட்பாளர் செந்தில்குமார், அன்புமணியை விட 97 ஆயிரத்து 944 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது பாமக, அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் தீவிர பிரசாரம் செய்தும், அவரது சொந்த தொகுதியில் பாமக மண்ணை கவ்வியதால், பாமக மற்றும் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: