கரூர், மே 23: ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வடிகால் பள்ளத்தை சரிசெய்யவேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் கருப்பாயிகோயில் தெரு இறக்கத்தில் ஆபத்தான முறையில் வடிகால் பள்ளம் திறந்துகிடக்கிறது. இது சரிவான பகுதிஎன்பதால் வாகனங்கள் வேகமாகவரும் இடமாக உள்ளது.மேலும்பசுபதிபாளையம் மேம்பாலத்தில் இருந்து ஜவகர் பஜார், வஉசிதெரு, மேட்டுத்தெரு, போன்ற பகுதிகளுக்கு வரும் முக்கிய பாதையாக இருக்கிறது.