ராணிமூக்கனூர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வலியுறுத்தல்

கடத்தூர்,  மே  21: கடத்தூர் அடுத்த ராணிமூக்கனூர் பகுதியில், குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடத்தூர் அருகே ராணிமூக்கனூர் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோடை காலம் என்பதால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இப்பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்ர் குடிநீர் வீணாகி வருகிறது. தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, உடைந்த குழாயை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: