பாப்பிரெட்டிப்பட்டியில் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

கடத்தூர், மார்ச் 15: நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் அரசு கட்டிடங்கள், பொது இடங்கள், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி எழுதப்பட்டிருந்த அரசியல் விளம்பரங்கள், கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், தலைவர்களின் சிலைகளை துணியை கொண்டு மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடத்தூர் பேரூராட்சி பகுதியில் சுவர் விளம்பரங்களை பேரூராட்சி பணியாளர்கள் அழித்தனர். இப்பணியை கடத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர் ஆகியோர் கண்காணித்தனர்.

Related Stories: