டூவீலர் மீது கார் மோதி சத்துணவு ஊழியர் மகனுடன் பலி

பென்னாகரம், மார்ச் 14: பென்னாகரம் அருகே, டூவீலர் மீது கார் ேமாதிய விபத்தில் மகனுடன் சத்துணவு ஊழியர் பலியானார். பென்னாகரம் தாலுகா, ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி இந்திராணி(47). இவர்களது மகன் கார்த்திகேயன்(26). இந்திராணி, நெருப்பூர் அருகே கொண்டையனூரில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம், இந்திராணி தனது மகனுடன், நெருப்பூரிலிருந்து ஏரியூர் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மூங்கில்மடுவு பகுதியில் இருந்து நெருப்பூர் நோக்கி சென்ற கார், இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இந்திராணி, கார்த்திகேயன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அங்கிருந்தவர்கள், இருவரையும் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தீவிர சிகிக்சை பலனின்றி இரவு இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏரியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறிது நேரத்தில் கார்த்திகேயனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: