அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் ₹7.71 லட்சம் காணிக்கை

தர்மபுரி, பிப்.14:  அதியமான்கோட்டை காலபைரவர் கோயில் உண்டியலில் ₹7.71 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது.தர்மபுரி அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற காலபைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்துகொள்வர். 3 மாதத்திற்கு ஒரு முறை இந்த கோயிலின் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்படுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நித்யா, நகை மதிப்பீடு உதவி ஆணையர் குமரேசன், ஆய்வாளர் இந்திரா, செயல் அலுவலர் சித்ரா, அர்ச்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், மொத்தம் ₹7லட்சத்து 71,983, ஒன்றரை பவுன் தங்க காசு, 92 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Related Stories: