குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

தர்மபுரி, பிப்.14: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு, அதியமான்கோட்டையில் நடந்தது. கருத்தரங்கிற்கு சமூக ஆர்வலர் மல்லமுத்து தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 25 ஆதரவற்ற பெண்கள் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் சாமிசெட்டிப்பட்டியில், ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு விடுதி தொடங்கப்படும். மாவட்டம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், திருச்சி சட்டக்கல்லூரி மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் உமன் ரைட் புரடெக்ட் சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: