தர்மபுரி, ஜன.10: தர்மபுரி மாந்தோப்பு பகுதியை சேரந்தவர் அருணகிரி. இவர், கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறார். இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவருடைய மனைவி ரமீளா (36). இவர்களுக்கு பிரசாத், ஸ்ருதி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அருணகிரி வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கேரளாவுக்கு திரும்பிய அருணகிரி, வீட்டுக்கு போன் செய்த போது யாரும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருணகிரி நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீடு பூட்டிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.