புளுதியூர் சந்தையில் ₹1.10 கோடிக்கு மாடுகள் விற்பனை

அரூர், ஜன.10: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடைபெறுகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க மாநிலம் முழுவதில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடு ₹23,500 முதல் ₹46,000க்கும், ஆடு ₹3500 முதல் ₹6900 வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில் கால்நடைகள் மட்டும் ₹1.10 கோடிக்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகை வருவதால், மாடுகளுக்கு அணிவிக்கும் கயிறு, பொங்கல் பானைகள், கலர்பொடி ஆகியவையும் அதிகம் விற்பனையானது.

Related Stories: