அரூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்

அரூர், டிச.7:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அரூர் கல்வி மாவட்ட அலுவலர் குழந்தைவேல் தலைமை வகித்தார். இதையொட்டி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பலூன் ஊதுதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளை  உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, பரசுராமன் ஆகியோர் நடத்தினர். இதில், பரமசிவம், விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: