உயரமாக அமைத்த பாதாள சாக்கடை மூடியால் அபாயம்

பென்னாகரம், டிச.6:  ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லுக்கு வருபவர்கள் பெரும்பாலும், வாகனங்களிலேயே வருகின்றனர். அப்படி வருபவர்கள், ஒகேனக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து மெயின் அருவிக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த சாலையில், பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட மூடிக்கள், சாலையில் இருந்து சுமார் 2அடி உயரத்திற்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் இந்த வழியாக முதல் முறையாக வரும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் மக்கள் புகார் கூறியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: