கிணற்றை தூர்வாரும் போது கிரேன் கயிறு அறுந்து உரிமையாளர் பலி

காரிமங்கலம், டிச.6: காரிமங்கலம் அருகே விவசாயக் கிணற்றை தூர்வாரும் போது, கிரேன் கயிறு அறுந்து விழுந்ததில், கிரேன் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  காரிமங்கலம் அருகே மல்லிக்குட்டையை சேர்ந்தவர் மகேந்திரன் (40). டிராக்டர் மற்றும் கிரேன் உரிமையாளர். இவர் மல்லிகுட்டை அருகே ஜிட்டிகானள்ளியில், சண்முகம் என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள 50அடி ஆழம் கொண்ட கிணற்றை தூர்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது கிரேன் கயிறு திடீரென அறுந்து விழுந்தது. இதில் கிணற்றில் தவறி விழுந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: