தர்மபுரி, நவ.8: வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் நெல் ஆகியவை முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. 1500 ஹெக்டேர் பரப்பளவிலும் நெல்லும், 2841 ஹெக்டேர் பரப்பில் கரும்பும், 5 ஆயிரம் ஹெக்டேரிலும் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, முக்கல் நாயக்கன்பட்டி, சோலைகொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை மற்றும் சோலைக் கொட்டாய், செட்டிக்கரை ஆகிய பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவ மழையை நம்பி மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.