கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தீபாவளி தரைக்கடைகள் அமைக்கும் பணி மும்முரம்

கரூர், நவ. 2:  கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தீபாவளிக்கு தரைக்கடைகள் அமைக்கும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. கரூர் நகராட்சி திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்டுதோறும் தீபாவளி தரைக்கடைகள் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூர் நகராட்சி திருவள்ளுவர் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கூரை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

தரைக்கடைகளுக்கு தடுப்புகள் அமைத்து மின்சார விளக்குகளும் பொருத்தப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் இந்த மினிபஜார் அமைய இருக்கிறது. தரைக்கடைகள் அமைக்கும் பணி இன்று அல்லது நாளை முடிவடைந்து கடைகள் வாடகை அடிப்படையில் விடப்பட உள்ளது. ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதியும் செய்யப்பட உள்ளது.

Related Stories: