தர்மபுரி, அக்.17: 30அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், தர்மபுரியில் நேற்று 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் ரேஷன்கடை பணியாளர்கள் 30அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் பணியை புறக்கணித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சுகமதி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.