அரூர், அக்.16: கம்பைநல்லூர் ராம் கல்வி நிறுவனங்களில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார்.
காரிமங்கலம் தாலுகா, பன்னிகுளம் ஊராட்சி வன்னிகுளம் கிராமத்தில் கம்பைநல்லூர் ராம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாம் பாய்ஸ் அமைப்பின் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு ராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன் தலைமை வகித்தார். மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் கோவிந்த், கோயம்புத்தூர் இந்துஸ்தான் கல்லூரி உதவி பேராசிரியர் மதிவாணன் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் தமிழ்மணி, கலாம் பாய்ஸ் அமைப்பின் தலைவர் அரவிந்த், ஊர்கவுண்டர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலாம் பாய்ஸ்அமைப்பின் செயலாளர் அசோக் வரவேற்றார்.